பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 3 மே, 2016

0368 எதைக்கொண்டுவந்தாய் நீ இழப்பதற்கு?

எதைக்கொண்டுவந்தாய் நீ இழப்பதற்கு?
ஒருநாள் ஒரு மனிதர் தான் இற ந்துவிட்டதை உணர்ந்தபோது, கையில் ஒரு பெட்டியுடன் கட வுள் அவர் அருகில் வந்தார். வா மகனே... நாம் கிளம்புவதற்  கான நேரம் நெருங்கி விட்டது என் றார். வியப்படைந்த அந்த மனிதர், "உடனடியாகவா?, இவ்வளவு விரைவாகவா?, என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" என் றார். மன்னித்துவிடு மகனே.. உன்னை அழைத்துச் செல்வத ற்கான நேரம் இது என்றார் கடவுள். சரி, அந்தப் பெட்டியில் என்ன உள்ளது? என்றார் மனிதர். "உன்னுடைய உடைமை கள்...." என்று கடவுள் சொன்னதும், என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் இவையா?. இல்லை, அவை பூமியில் நீ வாழ் வதற்குத் தேவையான உடைமைகள் என்றார் கடவுள். "எனது நினைவுகளா? என்று அவர் கேட்டதும், நிச்சயமாக அவை உன் னுடையவை இல்லை. அவை காலத்தின் கோலம்" என்றார் கட வுள். "என்னுடைய திறமைகளா?" என்றதும், அவையும் கண்டிப் பாக உன்னுடையவை இல்லை, அவை சூழ்நிலைகளுடன் சம்ப ந்தப்பட்டவை, அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண் பர்களுமா? என்று அவர் கேட்டதும், "மன்னிக்கவும் மகனே, குடு ம்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி என்றார் கடவுள். "அப்படியென்றால் என் மனைவி மற்றும் மக்கள் என்று அவர் கேட்க, "உன் மனைவியும் மக்களும் உனக்கு உரியவர்கள் இல்லை, அவர்கள் உன் இதயத்துடன் தொடர்புடையவை என் றார் கடவுள். என் உடல்? என்று அவர் கேட்க, அதுவும் உன்னு டையது கிடையாது, உடலும் குப்பையும் ஒன்று.." என்றார் கடவுள். என் ஆன்மா?" இல்லை, அது எனக்குரியது என்றார் கடவுள். மிகுந்த அச்சத்துடன் அந்த மனிதர், கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கித் திறந்தார். காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கண்ணில் நீர் வழியக் கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" என அவர் கேட்க, கடவுள் சொன்னார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் மகிழ்வாக வாழ்வ துடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடை யது என்று நீ நினைக்காதே. உன் வாழ்க்கையை வாழ். மகிழ்ச் சியாக வாழ மறக்காதே. அது மட்டுமே நிரந்தரம். உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது. இது இரக்கத்தின் காலம். அன்பர்களே! கீதை சொல்கின்றது, எதைக்கொண்டுவந்தாய் நீ இழப்பதற்கு? என்று, எதை நாம் எடுத்துச் செல்வோம் இறுதியில், நாம் செய்த இரக்கமான செய ல்களின் பலனைத்தவிர. வேதம் சொல்கின்றது, இதோ அவனவன் பாவ புண்ணியம் அவனோடு கூட வருகின்றது நியாயத்தீர்ப்புக்காக, நியாயத்தீப்பு நாளில் ந‌ம்மோடு  யாரும் நிற்பதில்லை  நாம் செய்த பாவம் புண்ணியம் தவிர ,,,,, அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...