பின் தொடர்பவர்கள்

திங்கள், 14 மார்ச், 2016

0360 எந்த துன்பத்திலும் கை விடார் கடவுள்

எந்த துன்பத்திலும் கை விடார் கடவுள்
தன் மகனை அழைத்து க்கொ ண்டு ஒரு காட்டி ற்கு ச் சென்ற தந்தை, மக னு க்கு ஒரு சவா லை முன்வை த்தார்.''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடு வாய். இன்று இரவு முழுவ தும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்ட ப்படும். ஆனாலும் நீ பயப்பட க்கூடாது; வீட்டிற்கு ஓடிவ ந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
                                                              அவனது கண்களைத் தந்தை துணி யால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அது வரை தந்தை அரு கில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூர த்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறி யது. மரங்கள் பேயாட்டம் ஆடுவதாகத் தெரிந்தது, அவனுக்கு.
‘அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்வி ட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்று ங்களேன்’என்று பலமுறை கத்திப் பார்த்தான், பயனி ல்லை. திடீரென்று அவனு க்குள் ஒரு துணிச்சல். என்ன தான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொட ங்கினான். இப்படியே இரவு கடந்தது. விடியற்காலை யில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோது தான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கி க்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆன ந்தம்! அழுகையே வந்துவி ட்டது. ’அப்பா’என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
“அப்பா, நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்?” என்றார்.
“இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறி யப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னி டம் எதுவும் பேசவில்லை?” என்று கேட்டான்.
“உன்னிடம் மன உறுதி வளரவேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால், அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’என்றார் தந்தை. மகனுக்கு, தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் உறுதிபெற வேண்டும் என்பதற்காகவே, பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார். அந்த இறை தந்தையை நாம் புரிந்து கொள்ள முயல்வோமா? அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...