பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0069 கடமையை செய் பலனை எதிர்பாராதே!

கடமையை செய், பலனை எதிர்பாராதே!
 

கடமையை செய் அதன் பலனை எதிர்பாராதே என்பது பகவற்கீதையில் சொல்லப்பட்ட ஒரு செய்தி,  அந்த தத்துவத்தை அழகாக விபரிக்கின்றது இந்த  சிந்தனை குறுங்கதை, அந்த விண்வெளி ஆய்வுகூடத்தில் எல்லா விஞ் ஞானிகளும் இரவு பகலாக‌ ஆய்விலே மூழ்கிப் போயிருந்தார்கள். ஒரு நாள் ஒரு விஞ்ஞானி வீட் டில்இருந்து கிழம்பும்போது இன்று தான் சீக்கிரம் வீட்டுக்குவந்து தன் பிள்ளைகளை கண் காட்சித் திடலுக்கு அழைத்துச்செல்வதாக உறுதி கொடுத் துவிட்டு வேலைக்கு வந்துவிட்டார். அலுவலகம் வந்ததும் தன் மேற்பார்வையாளரிடம் தான் இன்று சீக்கிரம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் தன் பிள்ளைகளை கண் காட்சிக்கு 'அழைத்துச்செல்ல வாக்கு கொடுத்துவிட்டேன் என்று சொன்னார் அந்த மேற்பார்வையாளரும் சரி அப்படியே செய் யும் என்று சொல்லிவிட்டார். விஞ்ஞானியும் வேலையை ஆரம்பித்து விட்டார். நேரம் சென் றதே அந்த விஞ்ஞானிக்குத்தெரியவில்லை. நேர ம் மாலை எட்டு மணியாகிவிட்டது. பரபரக்க வீட் டுக்கு ஓடினார். அங்கே அவரது மணைவி அமை தியாக பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தார். பிள்ளைகள் கண்காட்சிக்கு போய்விட்டார்கள். பிள் ளைகளை கண்காட்சிக்கு தனது மேற்பார்வையா ளரான விஞ்ஞானி அழைத்துச்சென்ரிருந்தார். அந் த விஞ்ஞானி வேறு யாருமல்ல இந்தியா இன்று புகழும் அப்துல் கலாம் அவர்களே! அப்துல் கலாம் சொல்வார் காலச்சரித்திரத்தில் கால் பதிக்க நினை த்தால் இழுத்து இழுத்து நடக்காதே! என்று.
அன்புடன் பேசாலைதாஸ்
இந்த கதை பற்றி உங்கள் கருத்து என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...