பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0124 இயல்பாக இருங்கள்

இயல்பாக இருங்கள் பேசாலைதாஸ்

அன்பர்களே காகம் அன்னநடை நடக்கபோய் தன் நடையையும் கெடுத்துக்கொண்டது என்று நம் முன்னோர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோமல்லவா,  நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் மற்றவர்களை விட சற்று மாறுதலாகவே படைக்கப்பட்டிருக்கின்றொ. இதுவே படைப்பின் அதிச யம். நம்மிடம் இயல்பான அம்சங்கள் பிறப்பிலேயே நம்மோடு இணைந்து உருவாக்கப்பட்டிரு க்கும், அது மற்றவர்களினால் அன்போடு நோக்கப்பட்டால், அதை நாம் எதற்காகவும் மாற்றிக் கொள்ளாமல், இயல்பாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும், ஒருவேளை நம்மை அறியாமல் நம்மிடம் வேண்டத்தகாத பண்புகள், நடத்தைகள் குணங்கள் இருந்துவிட்டால், அதை நாம் உணனர்ந்து அத திருத்தி அமைத்துக்கொள்ளவேண்டும், இதற்கு மனிதரிடம் நமக்குள்ள உறவு துணை செய்யும், இதனை விளக்குவதற்கு அருமையான ஒரு துணுக்கு கதை இதோ!

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விடமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்க த்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில் லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.
                                  ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தது. ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறு வனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட் டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ் க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந் தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.
                                             யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது. யோகி பாம்பைப் பார்த்து "அட முட் டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண் டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது. அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...