பின் தொடர்பவர்கள்

வியாழன், 25 ஜூன், 2015

0112 எண்ணங்களை பூட்ட வேண்டாம்!!!

எண்ணங்களை பூட்ட வேண்டாம்!!!

முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார். அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத் தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல மறுநாள் காலையில் கேட்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந் தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங் கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை நெருங்கினார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட் காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகா ரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்தது. உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார். பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து”உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை” பொல்லாத சுத்தியல்!நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார். பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!பரிதாபமாக முல்லாவை பார்த்தார். ந்மமில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசா மல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினை களுக்கு காரணமாகின்றோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...