பின் தொடர்பவர்கள்

புதன், 24 ஜூன், 2015

0066 நாம் செய்யும் தவறு

நாம் செய்யும் தவறு

ஒருமுறை செல்வந்தர் ஒருவரின் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. 'நான் நம்ம வீட்டு தொலைபேசியை பயன்படு த்துவதே இல்லை. எல்லாவற்றிற்கும் அலுவலத் தொலைபேசியை த்தான் பயன்படுத்துவேன். ஆனா லும் இவ்வளவு தொகை வந்திருக்கு. யார் இதற்கு காரணம்?' என்று யோசித்துக் கொண்டு தன் மனைவி யிடம் கேட்டார் குடும்பத் த‌லைவ‌ர். 'நானும் அலுவ லகத் தொலை பேசியை மட்டும பயன்படுத்துகி றேன். எனக்குத் தெரியாது' என்று அவர் மனைவி யும் கூறிவிட்டு, மகனிடம் கேட்குமாறு கூறினார்.  ’நான் வீட்டு தொலைபேசியைத் தொடுவதே இல்லை. எனக்கு அலுவலகம் கொடுத்திருக்கும் கைத்தொலைபேசி யில்தான், நண்பர்களிடம்கூட பேசுவேன் என்றார் மகன். ‘நாம் யாரும் பயன்படுத்த லைன்னா எப்படி இவ்வளவு கட்டணம் வந்துள்ளது’ என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த வீட்டு வேலைக்காரரோ, 'ஐயா, நானும் உங்களைப் போல் எப்போதும் நான் வேலை செய்யும் இடத்திலு ள்ள என்னோட அலுவலகத் தொலைபேசி மட்டுமே பயன்படுத்துகிறேன்' என் றார். அந்தக் குடும்ப உறுப் பினர்கள் செய்வதை த்தான் அவரும் செய்திருக் கிறார். சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்குப் புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...