பின் தொடர்பவர்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

0190 மனிதரில் இத்தனை நிறங்களா?

மனிதரில் இத்தனை நிறங்களா?
அன்பு உலக மகா சக்தி, அன்பு க்கு  பாரபட்ச்சம் கிடையாது. எல்லாவற்றையும் ஒரே கண்கொ ண்டு பார்க்கும்! மனித ஆன்மா வும் அப் படித்தான் படைக்கப்ப ட்டது ஆனால் மனித எண்ண ங்கள் ஆன்மாவை ஆட்கொ ண்டு, பந்தபாசங்கள், உறவுமு றைக்குள்  உலக ஆசைக்குள் அடக்கிவிட் டது. ஆக மொத்தத் தில், ஆன்மா,  மனித சதைக்கூட் டில் சிறைவைக்கப்பட்டுள்ளது. பட்டுவிடும் மேனி, விட்டுவிடும் ஆவி,சுட்டுவிடும் நெருப்பு, சூனியத் தில் நிலைப்பு என்று கவிஞன் பாடினான். அன்பு, ஆன்மா இவைகள் மீது, மனிதனுக்குள்ள தேடல் குறைவு தான், விபரீதங்களுக்கு வித்திடுகின்றது. ஒரு பையன் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தான். அவ னிடம் வழிப்போக்கான் கதை கொடுத்தான். தம்பி உன் மந்தையில் உள்ள  ஆடுகள் எந்தளவு தூரம் நட க்கும் என்று கேட்டான் அவன். எந்த ஆடுகள் வெள்ளை ஆடுகளா? கறுப்பு ஆடுகளா? என்றான். வந்தவர் வெள்ளை ஆடுகள் என்றார். அவை ஐந்து மைல் நடக்கும் என்றான். வந்தவர் அப்படியானல் கறுப்பு ஆடுகள் என்று இழுத்தார் அவையும் ஐந்து மைல்கள் தான் என்றான் அவன். எத்தனை அளவு புல் மேய்யும் என்றார் வழிப்போக்கன் ,  எந்த ஆடு கள் வெள்ளை யா கறுப்பா? என்றான் பையன்.  வெள்ளை ஆடுகள் என்றார் வழிப்போக்கன் அவை நான்கு கிலோ புல்லு சாப்பிடும் என்றான். வழிப்போ க்கன், கறுப்பு ஆடுகள் என்று கேட்கும் முன்னரே அவையும் நான்கு கிலோ புல் சாப்பிடும் என்றான் பையன். ஆடுகள் எல்லாம் அந்த பையனுக்கு சொந் தம், அவைகள் ஒரே மாதிரி வாழ்ந்தாலும் அவற்றை அதன் அதன் நிறம் கொண்டு வைகப்படுத்துகின் றான் மனிதன். அவன் மிருகங்களை மட்டுமா வைக ப்படுத்துகின்றான்? தன்னையும் சேர்த்தல்லவா வகைப்படுத்துகின்றான்? என்று தணியும் இந்த நிறப்பாகுபாடு?   தவிப்பவன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...