பின் தொடர்பவர்கள்

திங்கள், 27 ஜூலை, 2015

0224 கனி இருக்க காய் கவர்தல்,,,,,,,

கனி இருக்க காய் கவர்தல்,,,,,,,
இனிய உளவாக இன்னாத கூறல், கனி இரு க்க காய் கவர்தன்று இது குறள் வடிவம். இன் சொற்களை எப்போதும் பேசுங்கள் என்பது அதன் அர்த்தம். நம் வாயில் இருந்து வரும் சொற்கள் மட்டு மல்ல, நமது முகபாவமே மற்றவர்களை மன நோகப் பண்னிவிடும் என்பதை வள்ளுவர் இன்னுமொரு குறளில் அழகாக சொன்னார். மோப்பக்கு ழையும் அனிச்சம் பூப்போல, விருந்தினர் நோக்கக்குழைவர். ஆம் அன்பர்ப களே!மற்றவர்களை காயப்படுத்த, அல்லது மகிழ்ச்சிப்படு த்த, பார்வை ஒன்றே போதுமே! பல்லாயிரம் சொல் தேவையா? மற்ற வர்கள் மனம் நோகக்கூடாது என்பதற்காக புளிப்பான பழத்தை புன்முறுவலோடு சாப்பிட்ட நபிகள் நாயகம் ஷல்லல்லாஹ்கு அலை க்கும் வஷலாம் அவர்களுக்கு நிகழ்ந்த உண்மை சம்ப வத்தை கதைவடிவமாக சொல்கின்றேன். ஒருமுறை நபிகள் தன் தோழர்களு டன் கதைத்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கிழவி கூடை நிறைய பழம் கொண்டு வந்து, நபிகளிடம் கொடுத்தார். நபிகள் அதை ஒவ்வொன்றாக எடுத்து        சாப்பிட்டவண்ணம்கதைத்து க்கொண்டே சிரிப்போடு இருந்தார். தோழர்களு க்கு ஆச்சரியம்! எதையும் பகிர்ந்துண்டு வாழும் நபிகள் இன்று இப்படி செய்வது ஆச்சரியமாக இருந்தது. கிழவி போனபின்பு, நபிகளிடம் அவர்கள் கேட்டார்கள், ஏன் பழத்தை நீங்கள் மட்டும் உண்டீர்கள் என்று. அதற்கு நபிகள் சொன்னார். பழம் யாவும் புளிப்பாயிருந்தது. அதை நீங்கள் சாப்பிட்டு, உங்கள் முக பாவா னையால் கிழவியை மன நோகப்ப்ண்ணிவிடுவீர்களோ என்று நினைத்து அத்தனை பழங்க ளையும் நானே சாப்பிட்டேன் என்றார் நபிகள்! மற்றவர்களை சந்தோசப்படுத்துவதுதான் உலகிலே பெரிய சந்தோசம். There is no greater happiness than making others happy, regardless of your own problems அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவளுக்கு யவுமாகி,,,,,,,,,(சிறுகதை)

 அவளுக்கு யவுமாகி,,,,,,,,, (சிறுகதை) பேசாலைதாஸ் நோர்வே நாடு, வரப்போகும் பனிக்காலத்துக்கு கட்டியம் சொல்வது போல சாலை எங்கும் பனிப்புகார் அடைத்...